பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் நோய்கள்

பூ கருகுதல்: ஃபைட்டோப்தோரா பால்மிவோரா

சேதத்தின் அறிகுறி:

  • பூவின் தண்டு மற்றும் இதழ்களில் வெளிர் பழுப்பு, ஒழுங்கற்ற, நீர் தோய்ந்த புள்ளிகள் தோன்றும்.
  • புள்ளிகள் விரைவாக அதிகரிக்கும் மற்றும் அவை ஒன்றிணைந்து காயங்கள் போல் தோன்றும்.
  • ஈரப்பதமான சூழ்நிலையில், தொற்று கடுமையாக பூ முழுவதும் பரவுகிறது. இதன் விளைவாக பூ கருகுதல் மற்றும் பூ தண்டும் அழுகி விடும்.
  • மழை தூறுதல் மற்றும் குளிர்ந்த ஈரப்பதமான வானிலை இந்நோய்கு சாதகமாக அமையும். பூஞ்சை மண் வழியாக பரவும் மற்றும் தொற்று மண்ணின் அடித் தளத்திலேயே ஆரம்பிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிரிடுவதற்கு நோயற்ற மண்ணை பயன்படுத்துவதன் மூலம் நோய் தாக்கம் குறைகிறது.
  • பாதிக்கப்பட்ட பூக்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • அதிகப்படியாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016